மாணவர்கள் போராட்டம்
நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லூ கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வெள்ளியன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் விதத்திலும், இந்தியக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய மோடி அரசின் தேசிய வரைவு கல்விக் கொள்கையை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் வெள்ளியன்று இந்திய மாணவர் சங்கம் மாபெரும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியது.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதி கள் செய்து தரக் கோரி வியாழக்கிழமை யன்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவு டையார்கோவிலை அடுத்த பெருநாவ லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு 2வது நாளாக மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்த னர்.